மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தம்பதியர் எடுத்த முடிவு! திருவள்ளூர் அதிர்ச்சி

 
thi

இரண்டாவது மனைவியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ் நல்லாத்தூர் சங்கராச்சாரி தெருவில் வசித்து வந்தவர் வடிவேல். இவரது முதல் மனைவி அர்ச்சனா.   இவருக்கு தீபிகா என்ற 14 வயது மகளும்,  லிங்கேஸ்வரன் என்கிற 4 வயது மகனும் உள்ளனர்.   ஆனால் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் வடிவேல்.  இவருக்கு பிறந்த மகள் பூஜாவுக்கு 13 வயது ஆகிறது. அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

ட்ல்

 மகள் பள்ளிக்கு சென்ற நிலையில் வடிவேலும் ரேவதியும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.   பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய சிறுமி தாய், தந்தை இருவரும் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதிருக்கிறார்.  சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.  உடனே அவர்கள் மணவாளநகர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

 போலீசார் வந்து உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  அதன்பின்னர் நடந்த போலீஸ் விசாரணையில்,   ரேவதிக்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் வந்து அதை கொண்டாடியிருக்கிறார் வடிவேல்.   ரேவதிக்கு புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.    நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்திருக்கிறது குடும்பம்.   ஆனால் திடீரென இருவரும் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டு இருப்பதால்,   கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என்பது குறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.