குமுதம் ஆசிரியர் மரணம் - சீமான் இரங்கல்!!

 
seeman

குமுதம் இதழின் ஆசிரியர் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

tn

குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன்   மாரடைப்பு காரணமாக, சென்னையில் உள்ள இல்லத்தில் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட  ஏராளமான அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 



இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் , "குமுதம் இதழின் ஆசிரியர் மதிப்பிற்குரிய ஐயா ப்ரியா கல்யாணராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், குமுதம் குழுமத்தாருக்கும், பத்திரிக்கையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.