தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 680 அதிகரிப்பு.. இல்லத்தரசிகள் கலக்கம்..

 
gold


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.680 அதிகரித்து ரூ.40,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை தினசரி ஏற்ற இறங்களை சந்தித்து வருகிறது. எத்தனை விலையேற்றங்களை கண்டாலும், தங்கத்தின் மீதான மோகம்  குறைந்துவிடவில்லை.  எப்போதும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சேமிப்பாக கருதி, அதில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  பொதுவாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப  காலை, மாலை என  இரண்டு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது.  அந்தவகையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது.  
இந்நிலையில் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று விலையேற்றத்துடன்  வர்த்தகம் தொடங்கியிருக்கிறது.

தங்கம் விலை

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக  ரூ.680 உயர்ந்துள்ளது.  அதன்படி,  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு  சவரன்  ரூ.40,800க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74க்கு விற்கப்படுகிறது.  அதேநேரம் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு மேல் உயர்ந்திருப்பது  நடுத்தரக் குடும்பத்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.