முதல்வரின் குடும்பச் சுற்றுலா... அதிமுகவில் சசிகலா - ஈபிஎஸ் அதிரடி பேட்டி!

 
“முதல்வர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாரா?” – கேட்கும் எடப்பாடி மக்கள்! #edappadi

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

eps

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் துபாய் செல்லவில்லை; தனிப்பட்ட காரணங்களுக்காகவே  துபாய் சென்றுள்ளார். துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் நேரத்தில் தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளது.

tn

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்; அவரும் அவரது அமைச்சர்களும் துபாய் சென்று தொழில் முதலீட்டுகளை ஈர்க்க சென்று இருந்தால் சரி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்; ஆனால், விலைவாசி ஏறி உள்ளது" என்றார்.

sasikala eps

தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது,  சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.