பிறர் செய்வதை தான் செய்ததாக சொல்லிக் கொள்வது தான் 'திராவிட மாடல்' போலும்! - ஓபிஎஸ் சாடல்..

 
ஓபிஎஸ்

உயர் கல்வியில்  அதிமுக  புரிந்த சாதனையை தான் புரிந்ததாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க. அரசிற்கு  கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  
 
இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது உயர் கல்வி தான் என்பதை நன்கு அறிந்து, கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என அனைத்துப் படிப்புகளிலும் புதிய பாடப் பிரிவுகளை துவக்கி, கூடுதல் இருக்கைகளை உருவாக்கி சாதனை படைத்த அரசு  அதிமுக அரசு. இந்த உண்மையை முற்றிலும் மறைத்து, தி.மு.க.வின் ஆட்சிக் காலம் கல்லூரியின் பொற்காலம் என்று  முதலமைச்சர்,  சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே பேசியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

‘எனது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலம்... உறுதுணையாக இருக்கும்  ஆளுநருக்கு நன்றி..’ - ஸ்டாலின் பேச்சு..

அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியைப் பெற்ற பெருமை அதிமுக அரசையே சாரும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான். பொறியியல் படிப்பை எடுத்துக் கொண்டால், அ தி மு க  ஆட்சிக் காலத்தில்தான், திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.   சட்டப் படிப்பை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள 16 அரசு சட்டக் கல்லூரிகளில் திருச்சி, கோயம்புத்தூர், தர்மபுரி, விழுப்புரம், இராமநாதபுரம், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள எட்டு அரசு சட்டக் கல்லூரிகளும் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் என்பதே இலக்கு.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

  ரூ. 100 கோடி  மதிப்பில் அரசுப் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொண்டதும்,  தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் கல்லூரிகள் துவக்கப்பட்டதும் அதிமுக ஆட்சிக் காலத்தில்.  தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் ,  தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவரும்  அம்மா தான். 2010-2011 ஆம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை 2019-2020-ல்' 51.4 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கைப்படி 2030 ஆம் ஆண்டு 50 விழுக்காட்டிற்கு மேல் உயர் கல்வி மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென்ற நிலையில், அதனை அதிமுகவால்  பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு எய்திவிட்டது.

ஓபிஎஸ்

இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, திரு. கருணாநிதியின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்றும், தற்போதைய ஆட்சிக் காலம் உயர் கல்வியின் பொற்காலமா க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும்  முதலமைச்சர்   கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. ஒரு வேளை பிறர் செய்வதை தான் செய்ததாக சொல்லிக் கொள்வது 'திராவிட மாடல்' போலும்!  அதிமுகவின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. பள்ளிக் கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி, அனைத்திலும் சாதனை படைத்த ஆட்சி அதிமுக  ஆட்சிதான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..