இந்த மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..
ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை( ஜூலை 6) அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக அரசு விடுமுறை நாட்களில் தான் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.. அவைதாண்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் நடைபெறும் விசேஷங்கள் பிரசித்தி பெற்றவை... அதுபோன்ற உள்ளூர் விசேஷங்களுக்கு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவட்டாரு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை ( 6-ந் தேதி - புதன்கிழமை ) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த 29-ந் தேதியே கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதன்பிறகு நாள்தோறும், கேசவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாளை கும்பாபுஷேகம் நடைபெற இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக நேற்று 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திருவட்டாருக்கு, நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கலை ஆகிய 5 இடங்களில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நாளை ( 6-ம் தேதி _) கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.