சென்னையில் 312 இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை

 
chennai

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவருபவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 312 இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில்  ஈடுபட்டுள்ளனர்

பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னையில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும். போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, சென்னை பெருநகர் காவல்துறை அதிகாரிகள் மற்றும்  பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன சோதனையும் நடத்தி, விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், 01.01.2022 முதல் 15.05.2022 வரையிலான காலக்கட்டத்தில், சென்னையில் விபத்து குறித்த ஆய்வு ஒன்று நடத்திய போது, இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்ததாகவும், 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில், தலைக்கவசம்  அணியாமல் வாகனம் ஓட்டியதில் 80 பேரும், பின்னால் அமர்ந்திருந்த 18 பேர்கள் உயிரிழந்தது மட்டுமல்லாமல், வாகனம் ஓட்டிய 714 பேரும், வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்த 27 பேரும்  காயமடைந்து இருப்பதாக போக்குவரத்து போலீசார்  தகவல் தெரிவித்து உள்ளனர்.

chennai

இதையடுத்து, விபத்துகளைக் கட்டுப்படுத்தி, குறைக்கவும். 23.05.2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களும், நிச்சயம் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி சென்னையில் 312 இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டுபவர்கள் மீதும், அமர்ந்து வருபவர்கள் மீது,   மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.