பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து...

 
பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து... 


பாம்பன் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக   டிசம்பர் 25ம் தேதி வரை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “சென்னையில் இருந்து டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) மற்றும் டிசம்பர் 24, 25 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து... 

டிசம்பர் 24 மற்றும் 25 அன்று திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும், ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல இதே காலத்தில் புறப்பட வேண்டிய வருகை தரவேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையத்தை  9360548465 அலைபேசி எண்ணிலும், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையத்தை  9360544307 என்கிற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.