இரண்டு நாள் கழித்து கன்னியாஸ்திரி உடல் சடலமாக மீட்பு

 
k

இரண்டு நாள் கழித்து கன்னியாஸ்திரியின் உடல் விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.   

 திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா.  24 வயதான இந்த இளம்பெண் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.

w

 இந்நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வகுப்பை முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்கு சென்றிருக்கிறார் கௌசல்யா.  அப்போது அருகில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை பார்வையிட சென்றிருக்கிறார்.  அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு சாக்லேட்  கொடுத்துவிட்டு சிறிது நேரம் விளையாடி இருக்கிறார். 

 பின்னர் விடுதிக்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்து இருக்கிறார்.  இதை அறிந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் சொல்ல நேற்றுமுன்தினம் மதியத்தில் இருந்து கௌசல்யாவின் உடலை தேடி வந்தார்கள். 

hu

 90 அடி ஆழ கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்ததால் அவரது உடலை கண்டு பிடிப்பது பெரும் சிரமம் இருந்தது.  நேற்று முன்தினம் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் கௌசல்யாவின் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது.   தொடர்ந்து ராட்சத குழாய்கள் மூலம் 3 விவசாய நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்தி விடிய விடிய கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்தது.

 இந்தநிலையில் நேற்று காலையில் கௌசல்யா திருமணத்தில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.    தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள்.   கிணற்றிலிருந்து கௌசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.  

 இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.