தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமனம்!!
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (20-12-2022) காலை சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு.அப்பாவு அவர்கள் கலந்து கொண்டார்.
இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ராஜ இளங்கோ மற்றும் திரு.V.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.