உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து..

 
உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து.. 


உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி  மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில்  சேவை இயக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே  நீலகிரி மாவட்டத்தில் குன்னுர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  கடந்த 13ம் தேதி பெருத்த கனமழை பெய்தது.   இதன்காரணமாக  கல்லாறு- ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10க்கு, மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து.. 

மேலும் மழையின் காரணமாக தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு  விழுந்தன. இதன் காரணமாக கடண்ட 14ம் தேதி முதல்  16ம் தேதி  வரை  மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி  நடைபெற்று வந்த நிலையில், நேற்று சோதனை ஒட்டம், நடைபெற்றது.  இன்று முதல் மலை ரயில் சேவை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தண்டவாளா சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததால்,  இன்றும் ( ஞாயிற்றுக்கிழமை ) மலை ரயில் சேவை  ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை ( திங்கட் கிழமை) முதல் மீண்டும் மலை ரயில் சேவை இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.