விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி சிறையிலடைப்பு

 
vv


 விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  செல்போன் திருடியதாக இளைஞர் ஒருவரை தாக்கிய வழக்கில் இந்த ஒன்பது பேரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 சென்னை பல்லாவரத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி.   இவர்,  அதே தெருவில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளர் அன்சர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

bz

 பாலாஜிக்கு  சம்பள பாக்கி தர வேண்டி இருந்ததால் அதற்காக கடையில் வேலை செய்யும் நபர்களில் செல்போன் 10 ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை  திருடியதாக நினைத்து பாலாஜியை அன்சர், பாலகுமார், ராஜேஷ் ,நிசார் அகமது ,அப்துல் ரகுமான்,  முகேஷ் கண்ணன், மனோஜ் குமார் உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து கட்டையால் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.

 இந்த தாக்குதலில் பாலாஜிக்கு தலையில் படுகாயமடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . சிகிச்சையில் இருந்த பாலாஜியிடம் பல்லாவரம் போலீசார் வாக்குமூலம் பெற்று, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உள்பட 9 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.