சாம்பாரில் பூரான் - அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!!

 
tn

அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில்  உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நாகையில் அரங்கேறியுள்ளது.

ttn

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 287 மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.  இந்த விடுதியில் நேற்று இரவு இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது. சாம்பார் மற்றும் தோசை மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் உணவை சாப்பிட்ட மாணவிகளின் 50 பேர் மயக்கம் அடைந்தனர்.  அத்துடன் வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அனைவரும் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

tn

இதையடுத்து மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை பரிசோதித்ததில் சாம்பாரில் பூரான் இறந்த கிடந்தது தெரியவந்தது.  30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில்,  20ற்கும்  மேற்பட்ட மாணவிகள் உள்நோயாகி நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.