பரங்கிமலை கொலையின் பின்னணி என்ன? - கைதான சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

 
tn

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

tn

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்யா என்ற மாணவி காத்துக் கொண்டிருந்தார் . அப்போது அங்கே வந்த இளைஞர் சதீஷ் சத்யாவிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.  இதையடுத்து பரங்கிமலை தடத்தில் வந்த மின்சார ரயிலில் சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டு உள்ளார் . இதன் காரணமாக ரயில் மோதி தலை நசுங்கி  சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதையடுத்து அங்கிருந்து இளைஞர் சதீஷ் தப்பித்து சென்றார்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவின் சடலத்தை கைப்பற்றினர்.  அத்துடன் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை தொடங்கினர். 

tnt

ரயில் முன் பாய்ந்து நானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன்

விசாரணையில் சத்யா வசித்து வந்த பகுதியை சேர்ந்த  சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து இளைஞர் சதீஷை கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் சதீஷ் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு துரைப்பாக்கம் பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்த மாணவியை கொலை செய்த இளைஞர் சதீஷ் இன்று போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் , "ரயில் முன் பாய்ந்து நானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன் .பயணிகள் என்னை பிடிக்க வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டேன்.  ஐந்து ஆண்டுகளாக உருகி உருகி காதலித்தோம் .பெற்றோர் எதிர்ப்பால் காதலை முறித்துக் கொண்டார் . வேறு இடத்தில நிச்சயதார்த்தம் செய்து விட்டனர். இதனால் கட்டாயப்படுத்தி பேச முயற்சித்த போது ஏற்பட்ட தகராறு ரயில் முன் தள்ளிவிட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.

சத்யாவின் தலைமுடியை பிடித்து அடித்த சதீஷ்

tn

கைது செய்யப்பட்டகுற்றவாளி சதீஷ் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தயாளன் என்பவரின் மகன் .  சத்யாவும் சதீஷும் பள்ளி பருவ காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து சதீஷ் வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதைக்கு அடிமையாக சுற்றி திரிந்து உள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஷை சத்யா பிரிந்துள்ளார்.  ஆனால் தன்னை தொடர்ந்து காதலிக்குமாறு சத்யாவை சதீஷ்  வந்ததாக தெரிகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சத்யா படிக்கும் தி நகரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று சத்யாவின் தலைமுடியை பிடித்து சதீஷ் அடித்துள்ளார் .

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தல் 

tn

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பெயரில் போலீசார் சதீஷை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இப்படியாக தொடர்ந்து சத்யாவை சதீஷ் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்த நிலையில் அவர் முடியாது என்று மறுத்து வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட சத்யாவின் தாய் ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் .இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு கடந்த ஓராண்டாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.சத்யாவை இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்ததாக சதீஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  தற்போது மகளின் இறப்பால் அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.