உயிருக்குப் போராடிய இளைஞர் - களத்தில் இறங்கிய அமைச்சர்

 
mi

 சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞருக்கு அமைச்சர் பெரியசாமியே களத்தில் இறங்கி உதவி செய்திருக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் சாலையில் ராமையன்பட்டி அருகே சுரேஷ் என்கிற இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது எதிர்பாராதவிதமாக அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார்.   சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார் அந்த இளைஞர் சுரேஷ். 

pe

 அப்போது அந்த வழியாக சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இதனை பார்த்துவிட்டு உடனே காரை நிறுத்தச் சொல்லி இறங்கி சென்றிருக்கிறார். ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷை பார்த்து விட்டு போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல்  தெரிவித்துள்ளார்.

 ஆம்புலன்சில் வரவைத்து சுரேசை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.   அதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையின் முதல்வரை தொலைபேசியில் அழைத்து,   சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷ் என்கிற இளைஞரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்திருக்கிறோம்.  முதலுதவியும் செய்து இருக்கிறோம்.  மேல் சிகிச்சை செய்து அவரை எப்படியாவது காப்பாற்றுமாறு பரிந்துரை செய்திருக்கிறார்.  அதன் பின்னர்தான் அமைச்சர் பெரியசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

 அமைச்சர் திடீரென்று காரை நிறுத்திவிட்டு இறங்கி சாலையில் அடிபட்டு கிடந்தவருக்கு உதவிய செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.