பாம்பு கடித்து 4 வயது சிறுமி பலி! இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது சோகம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து நான்கு வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சாராயமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகள் இசைபிரியா (4) நேற்று இரவு வீட்டில் தாய் மற்றும் தந்தையுடன் குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரவு இரண்டு மணி அளவில் விஷப்பாம்பு இசைப்பிரியாவை கடித்துள்ளது குழந்தை அழுகை சத்தத்தை கேட்ட தந்தை அரவிந்த் மற்றும் தாய் இருவரும் உடனடியாக முண்டியமாக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இசைப்பிரியா சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து குறித்து திருவெண்ணெய் நல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலியான சம்பவம் சாராயமேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.