சென்னையில் பரபரப்பு! நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த BMW கார்

 
fire

சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிருந்த BMW கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை குரோம்பேட்டை சாலையில் இன்று காலை வழக்கம் போல் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த வழிகாக பச்சை கலர் BMW கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. திடீரென அந்த காரின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் BMW காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியே குதித்தார். ஓட்டுநர் வெளியேறிய சிறிது நேரத்தில் அந்த கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலைகளில் வாகனத்தை நிறுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.