கள்ளக்குறிச்சியில் கிணற்றில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி!

 
drowning

கள்ளக்குறிச்சியில் விவசாய கிணற்றில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெயகாந்த். இவரது மகள் சஞ்சனா(8). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று மதியம் சிறுமி சஞ்சனா, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் குமரேசன்(8) என்பவருடன் க.மாமனந்தல் சாலையில் கிருஷ்ணா நகரில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரிழ் மூழ்கி உயிரிழந்தனர்.

kallakurichi ttn

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மாயமானதால், இருவரது பெற்றோரும் தேடி வந்தனர். அப்போது, கிருஷ்ணா நகர் விவசாய கிண்ணற்றின் அருகே இருவரது உடைகளும் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது குழந்தைகள் சஞ்சனா, குமரேசன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். 

தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.