“கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும்” - அமைச்சர் தகவல்

 
tn

கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையத்தில் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி  வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கோயம்பேட்டில் இருந்து தென்பகுதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தே செல்லும்.

tn

அரசு விரைவு போக்குவரத்து கழகம் நாளையிலிருந்து முழுமையாக இங்கு செயல்படும்; மாநகர பேருந்துகள் இங்கிருந்து கோயம்பேடு வரை இயக்கப்படும். சென்னை கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும். கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து இயக்கப்படும்; பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும்" என்றார்.