கைநிறைய சம்பளம்... சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை! தமிழக அரசின் புதிய அறிவிப்பு..!

 
1 1
 திருப்பூர்,  திருச்சி, மதுரை, கரூர், தூத்துக்குடி, கோவை, விருதுநகர், திண்டுக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 122 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில், கோவையில் 28 காலிப் பணியிடங்களும், மதுரையில் 15, தூத்துக்குடியில் 23, திருச்சியில் 6, திண்டுக்கல்லில் 14, சேலத்தில் 13, விருதுநகரில் 23 என மொத்தம் 122 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.   இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  இப்பணியிடங்களுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகததில்  ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும், MS Office சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கனினி மென்பொருள் சார்ந்த கல்வி தகுதி பெற்றவருககு முன்னுரிமை வழங்கப்படும். இருசக்கர வாகனம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் சுய உதவிக் குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு கைநிறைய சம்பளம் வழங்கப்படும். ஆனால், சம்பளம் குறித்து அறிவிப்பில் குறிப்பிடவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

 இப்பிணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் கல்வித்தகுதி, அனுபவ ஆகியவற்றின் அடிப்படையில்  தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதன் மூலம், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிப்பது எப்படி?

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட இணையதளத்திற்கு சென்று, அதில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, நன்னடத்தை சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.   விண்ணப்ப படிவத்தை  உரிய சான்றிதழ் நகலுடன்  இணை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10  மணி முதல் மாலை 5.45 வரை நேரிலோ அல்லது  அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  பிப்ரவிரி 16ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டிகிரி முடித்தவர்கள் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.