எடப்பாடி வெளியிட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

 
e

நடுரோட்டில் இளைஞர் கழுத்தை அறுத்து ஆணவ கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முன்னாள் முதல்வர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.  28 வயதான இந்த வாலிபர் சரண்யா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள் .

பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி சரண்யாவை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஜெகன்.  இதனால் பெண் வீட்டார் ஜெகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர்.

je

 இந்த நிலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் அவரது உறவினர்கள் சேர்ந்து நடுரோட்டில் பைக்கை வழிமறித்துள்ளனர்.   கீழே விழுந்து கிடந்த ஜெகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.  இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இந்த வீடியோவை தனது டுவிட்டர் பகுதியில் வெளியிட்டு,  ‘’கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.

அரசியல் கொலை,ஆதாயக்கொலை, ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது’’என்று பதிவிட்டு இருக்கிறார்.