புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை

 
rh

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கஜா என்ற கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார். மப்பேடு கஜா என்கிற கஜேந்திரன் மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கில், 2009ம் ஆண்டு டிசம்பர் 22 முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார் .

h

கஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது; இந்த சூழலில் கஜா சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

suicide

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறை காவலர்கள் கஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் சிறை கைதி தற்கொலை குறித்து புழல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.