பணம் வராததால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியால் உடைத்த நபர் கைது!

 
atm

வேலூர் மாவட்டம் ஊசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்கு இன்று காலை 9 மணி அளவில் ஊசூர் காலனி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். பலமுறை பணம் எடுக்க முயற்சி செய்தும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டில் இருந்து கோடாரியை எட்டுத்து வந்து அந்த ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை பிடித்து வைத்துவிட்டு அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

atm

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் திருடு போகவில்லை என்பது உறுதியானது. ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஆத்திரத்தில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார் என்பதும்,  கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.