திருவாரூரில் சாலையோர பள்ளத்தால் ஒருவர் பலி!!
Updated: Aug 11, 2023, 11:23 IST1691733232440
திருவாரூரில் சாலையோர பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார்.
திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த அரசு ஊழியர் குமார் என்பவர் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த கம்பிகள் குத்தி குமார் உயிரிழந்ததாக தெரிகிறது. குமாரின் உடலை மீட்ட திருவாரூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக சென்னை பூந்தமல்லியில் புதைவட கேபிள் அமைக்க தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதி வாசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.