#BREAKING சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 8 பேர் பலி

 
Fire

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 5 பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கான உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறும், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்குமாறும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.