சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Dec 16, 2023, 13:09 IST1702712393292
சென்னை அருகே மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது . சிபிசிஎல் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் புகை மூட்டம் சூழ்ந்தது.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர்; சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்த பரபரப்பு அடங்குவதற்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.