சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

 
tn

சென்னை அருகே மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது . சிபிசிஎல் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் புகை மூட்டம் சூழ்ந்தது.

tn

தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர்; சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில்  கச்சா எண்ணெய் கலந்த பரபரப்பு அடங்குவதற்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.