கொடநாடு வழக்கில் திருப்பம்- நீதிபதி அதிரடி மாற்றம்

 
j

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.   அவருக்கு பதிலாக நீதிபதி அப்துல் காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொ

 ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவருக்கு சொந்தமான கொடநாடு பங்களாவை ஒரு கும்பல் குறி வைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் தான் 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது.  ஓம் பகதூர் என்கிற காவலாளியை கட்டி வைத்துவிட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது.  இறுதியில் அவர் கொலை செய்யப்படுகிறார்.

 பங்களாவில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்படுகிறது.  சயான் என்கிற கேரளாவை சேர்ந்தவர்தான் இதனை செய்ததாக சொல்லப்படுகிறது.  இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி இதில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவர் விபத்தில் மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. 

 ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்த இந்த கனகராஜ் சேலத்தைச் சேர்ந்தவர் சயான் என்பவர் உள்ளிட்ட கூலிப்படையை பணம் கொடுத்து அழைத்து வந்ததாக சொல்லப்படுபவர் தான் இந்த கனகராஜ் .   கனகராஜ் மரணம் அடைந்த அதே நாளில் சயான் சென்ற காரும் விபத்திற்கு உள்ளாகிறது .அந்த இடத்திலேயே சயானின் மனைவியும் குழந்தையும் கொல்லப்படுகிறார்கள்.  காயத்துடன் தப்புகிறார் சயான்.  குற்ற வழக்குகளில் இது போன்று  நிறைய நடக்கும்.  ஒருவரை வைத்து ஒரு சம்பவம் செய்ய வைப்பார்கள்.  அதே ஆட்களை உடனே காலி செய்து விடுவார்கள்.  இதுதான் கொடநாடு சம்பவத்தில் நடந்திருக்கிறது.  அடுத்த சில நாட்களில் கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டர் ஆக இருந்த தினேஷ் குமார் என்பவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.  தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது .  

க்

கொடநாடு பங்களாவில் சில சின்ன சின்ன பொருட்கள்தான் காணாமல் போனது என்றும் அவைகளும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டன என்று அவற்றை கைப்பற்றி விட்டோம் என்றும் அதிமுக ஆட்சியில் சொன்னார்கள்.   2019 ஆம் ஆண்டில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ ஒரு அதிர்ச்சியான வீடியோவை வெளியிட்டார்.   அந்த வீடியோவில் சயான், வாளையார் மனோஜ் பேட்டியளித்திருந்தார்கள்.   பழனிசாமிக்கு இவையெல்லாம் தெரியும். அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கனகராஜ் எங்களிடம் சொன்னதாக சயான் அதில் பேட்டி கொடுத்திருந்தார்.

 பழனிச்சாமியின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்கு மூலத்தில் சயான், வாளையார் மனோஜ் சொல்லியிருக்கிறார்கள்.  தங்களுக்கு உதவியாக சஜீவன் என்பவர் பெயரையும் சயான் ,வாளையார் மனோஜ் இருவரும் சொல்லியிருக்கிறார்கள்.  இந்த சஜீவன் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவுக்கு மர வேலைப்பாடுகள் செய்து கொடுத்ததாக சொல்லப்படுகிறார்.  அந்த சஜீவனுக்கு அதிமுகவில் வர்த்தக அணி செயலாளர் பொறுப்பை கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி .

சஜீவனுக்கு கட்சிப் பதவி தரக்கூடாது என்று ஊட்டியில் பல்வேறு இடங்களில் அதிமுகவினரே எம்ஜிஆர் சிலைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பழனிச்சாமி முதலமைச்சராக நீலகிரிக்கு வந்த போது அரசு விழாவில் அவர் அருகில் சஜீவன் இருந்திருக்கிறார்.  மூன்று அரசு விழாக்களில் பழனிச்சாமியுடன் சஜீவன் இருந்துள்ளார். இந்த சஜீவன் அவரது தம்பி சுனில் இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.

ட்

பழனிச்சாமி மீது குற்றம் சாட்டினார்கள் என்பதால் சயானும் மனோஜும் சிறையில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள்.  இந்த நிலையில் தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் மறுபடியும் குற்றவாளிகளையும் சாட்சிகளையும் விசாரிக்க தொடங்கியதும் சட்டமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார்  பழனிச்சாமி. கொடநாடு வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை நடந்து வருகிறது.

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டு காலமாக நடந்து வருகிறது.   இந்த வழக்கை கடந்த ஒரு ஆண்டு காலமாக நீதிபதி முருகன் விசாரித்து வந்தார்.   இந்த வழக்கு சிபிசிஐடிக்கு  மாற்றம் செய்யப்பட்டது முதல் பல்வேறு திருப்பங்களுடன் விசாரணை நடந்து வருகிறது.   இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதி நீதிபதி முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.  அவர் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.  அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.