புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்

 
EB

புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Puduchery

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலும் மின் இணைப்போடு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது.  இதைத் தொடர்ந்து மின் நுகர்வோர் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பையும் இணைத்து வந்தனர்.  கடந்த டிசம்பர் ஜனவரி 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.  மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் அவ்வாறு இணைக்க தவறிவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்தது.

eb and aadhar

இந்நிலையில்  புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு ஆவணத்தையும் இணைக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.