ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

 
கன்னியாகுமரி கன்னியாகுமரி


 ஆடி அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு முதல், ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருள்காட்சி நடைபெற்று வருகிறது.  குழித்துறை நகராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த விழாம் நடப்பாண்டு கடந்த ஜூலை 9ம் தேதி தொடங்கியது.  தொடர்ந்து  20 நாள்கள் நடைபெறும் இந்த பொருள்காட்சி ஜூலை 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.  

  மாவட்டத்திற்கு  20ம் தேதி விடுமுறை

இதில் குறிப்பாக ஆடி அமாவாசை நாளில் பொருட்காட்சியைக் காண அதிகளவிலான மக்கள் கூடுவார்கள். ஆகையால் நடப்பாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அழகுமினா உத்தரவிட்டுள்ளார். அன்றைய் தினம்,  அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும்.  

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்,  ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளர்களுடன் ஜூலை 24ம் தேதி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.