அப்துல்கலாம் நினைவு நாள் - ஓபிஎஸ் ட்வீட்
மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்த இவர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்று பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நாட்டின் தென்கோடியில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய தொழில்நுட்ப அறிவால் வளர்ச்சியடைந்து, வளமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவரும், இந்திய குடியரசத் தலைவர் பதவியை வகித்தவருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் #APJAbdulKalam அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
இந்திய நாட்டின் தென்கோடியில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய தொழில்நுட்ப அறிவால் வளர்ச்சியடைந்து, வளமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவரும், இந்திய குடியரசத் தலைவர் பதவியை வகித்தவருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் #APJAbdulKalam அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது…
— O Panneerselvam (@OfficeOfOPS) July 27, 2023
இந்திய நாட்டின் தென்கோடியில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய தொழில்நுட்ப அறிவால் வளர்ச்சியடைந்து, வளமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவரும், இந்திய குடியரசத் தலைவர் பதவியை வகித்தவருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் #APJAbdulKalam அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது…
— O Panneerselvam (@OfficeOfOPS) July 27, 2023
அவரது நினைவு நாளான இன்று “கனவு, கனவு, கனவு, இதனை சிந்தனை வடிவமாக்குங்கள், பின் செயலாற்ற முனைப்படுங்கள்” என்ற அவரது அறிவுரையை பின்பற்ற உறுதி ஏற்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.