2023ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!!
2023ம் ஆண்டில் சென்னை மெட்ரோவில் சுமார் 9.11 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலை தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் நிலையில், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. சென்னையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், குறைவான நேரத்தில் பயணிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது மெட்ரோ ரயில். சென்னையில் மெட்ரோ ரயில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2023ம் ஆண்டில் சென்னை மெட்ரோவில் சுமார் 9.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2022ம் ஆண்டை விட 2023ல் 3 கோடி பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்தாண்டில் 3.01 கோடி பேர் அதிகம் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.