தொடர் மழை - சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை

 
sathuragiri

தொடர் மழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

rain

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமு  அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும்,  சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி இல்லை . அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

sathuragiri

இந்த சூழலில்  ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நவ.10 முதல் 14ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.