நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு - கோவையில் பெரும் பரபரப்பு

 
Acid

கோவையில் நீதிமன்ற வளாகத்திலேயே பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கம் போல் இன்று அதன் செயல்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திருந்து வந்திருந்த பெண் ஒருவர் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவிதா என்ற அந்த பெண் மீது ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். இதனால் கவிதா படுகாயம் அடைந்த நிலையில், அவர் வலியில் அலறி துடித்தார். இதனிடையே அருகில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் ஆசிட் வீசும் போது தடுக்க முயன்ற நிலையில், அந்த வழக்கறிஞர் மீது ஆசிட் வீசப்பட்டதில் அவரும் காயமடைந்தார். 

ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவிதா மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அருகில் இருந்த வழக்கறிஞர்கள், ஆசிட் வீசிய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே பெண் மீது கணவர் ஆசிட் வீசிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.