அதிரடி உயர்வு.. மீண்டும் ரூ. 42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.42,008க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற , இறக்கத்துடனையே இருந்து வருகிறது. இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்படி ஒரு வாரம் தொடர் சரிவிக்குப் பின்னர் 27ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,608 ஆக விற்பனையானது. தொடர்ச்சியாக 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 அதிரடியாக குறைந்தது. தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் பிப்ரவரி 28ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,556க்கும் விற்கப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் கடந்த மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் ரூ. 288 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,944க்கும் விற்கப்பட்டது. இதற்கிடையே நேற்றைய தினம் சவரனுக்கு ரூ24 என சற்று குறைந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,008 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,251 க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.