சிக்னல்களில் ஒலிக்கப்பட்ட பாடல்களை நிறுத்த நடவடிக்கை!!
சென்னை சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல் நிறுத்தப்படுவதாக பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு போக்குவரத்து விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் மியூசிக் சிக்னல் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது. அதன்படி திரைப்படப் பாடல்கள், மெல்லிசை ஆகியவை போக்குவரத்து விழிப்புணர்வு தகவல்களுடன் ஒலிபரப்பப்பட்டு வந்த நிலையில் , இவற்றிற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
இந்த சூழலில் மெல்லிசை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு செய்திகள் சிக்னல்களில் ஒலிபரப்பப்படுவதால் , வாகன ஓட்டிகளின் கவனம் சிதறவும், விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சிக்னல்களில் ஒலிபரப்பப்பட்டு வந்த மெல்லிசை விழிப்புணர்வு செய்திகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.