புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண் உயிரிழந்த விவகாரம் - நடிகர் அல்லு அர்ஜூன் கைது

 
allu arjun allu arjun

புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் நாடு முழுவதும் டிசம்பர் 05ம் தேதி வெளியாகி வசூல் வேட்டையைக் குவித்து வருகின்றது புஷ்பா 2 திரைப்படம்.  மைத்ரி மூவி தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது, ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் வீட்டில் இருந்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்துள்ள போலீசார், சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.