சிவசேனா சார்பில் நடிகர் கோவிந்தா போட்டி..?

 
Q
மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், பாலிவுட் நடிகர் கோவிந்தா நேற்று சிவசேனாவில் இணைந்தார். அவருக்கு காவி கொடியை கொடுத்து ஏக்நாத் ஷிண்டே வரவேற்றார். பின்னர் நடிகர் கோவிந்தா பேசுகையில், ‘2004 முதல் 2009 வரை அரசியலில் ஈடுபட்ட பிறகு, நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. 14 ஆண்டுகால வனவாசத்துக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்.
வாய்ப்பு கொடுத்தால் நான் கலாசாரம், கலை துறையில் பணியாற்றுவேன். ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆன பிறகு மும்பை அழகாக மாறி வருவதும், வளர்ச்சி அடைவதும் தெரிகிறது' என்றார். முன்னதாக நடிகர் கோவிந்தா 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வடக்கு மும்பை தொகுதியில் தொடர்ந்து 5 முறை எம்பியாக இருந்த பாஜகன் ராம் நாயக்கை தோற்கடித்தார். தற்போது அவர் சிவசேனா சார்பில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக ‘இந்தியா' கூட்டணி சார்பில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அமோல் கிருத்திகர் போட்டியிடுகிறார்.