முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற நடிகர் மன்சூர் அலிகான்!

 
mansoor ali khan

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெற்றார்.

லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த  விவகாரத்தில் விசாரணைக்கு நடிகர் மன்சூர் அலிகான் இன்று நேரில் ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் உடல்நிலை சரியில்லை என கூறி அவர் ஆஜராகவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்து இருந்தார். 

mansoor alikhan

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெற்றார். 
எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு போலீஸாருக்கு பதில் தவறுதலாக நுங்கம்பாக்கம்  என குறிப்பிட்டுவிட்டதால் அந்த முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.  புதிதாக தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.