நடிகர் மயில்சாமியின் கடைசி நிமிட வீடியோ .. இணையத்தில் வைரல்..

 
நடிகர் மயில்சாமியின் கடைசி நிமிட வீடியோ .. இணையத்தில் வைரல்..


நடிகர் மயில்சாமி இறப்பதற்கு முன்பாக கேளம்பாக்கம் சிவன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த  அவரது கடைசி நிமிட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நடிகர் மயில்சாமி மறைவுக்கு முன்பு இன்று அதிகாலை கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

நடிகர் மயில்சாமியின் கடைசி நிமிட வீடியோ .. இணையத்தில் வைரல்..

அந்த நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் மணி வாசிக்க அவர் அருகில் அமர்ந்திருக்கும்  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து , மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ஸ் மணி, மகாசிவராத்திரியை ஒட்டி நேற்று நடந்த கோயில் பூஜையில் மயில்சாஇ என்னுடன் தான் இருந்தார்.  அதிகாலை 3 மணி வரையில் அவருடனேயே இருந்தேன்.. நிகழ்ச்சி முடிந்ததும் மயில்சாமிக்கு வாட்ஸ் அப் மூலமாக செய்தி அனுப்பினேன். அப்போது அவர் குரல் சற்று சோர்வாக இருந்தது.   

அத்துடன் மயில்சாமி  ‘இந்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு விவேக் சாரை கூட்டிட்டு வந்தேன்..நீங்களும் வந்துட்டீங்க, ரஜினி சாரை இந்த கோயிலுக்கு கூட்டிட்டு வந்து, அவர் கையாலே சிவனுக்கு பாலூத்த வைக்கணும்.. அதுதான் என் ஆசை’ இது தான் அவர் எங்கிட்ட நேரில் பேசிய கடைசி வார்த்தை.. ” என்று  ட்ரம்ஸ் மணி உருக்கமாக தெரிவித்தார்.