நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய 1 கோடி ரூபாயை திருப்பி வழங்க உத்தரவு

 
டி.ராஜேந்திரனுக்கு மேல் சிகிச்சை.. அமெரிக்கா செல்லும் சிம்பு ! டி.ராஜேந்திரனுக்கு மேல் சிகிச்சை.. அமெரிக்கா செல்லும் சிம்பு !

நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய 1 கோடி ரூபாயை திருப்பி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிம்புவின் மான நஷ்டஈடு வழக்கு; அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் |  nakkheeran

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு  9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய்  முன்பணமாக  கடந்த 2021ம் ஆண்டு அளிக்கப்பட்டதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவரும் ரூ.1 கோடியை சென்னை உயர்நீதிமன்றத்தில் செலுத்தினார்.

சிம்பு வழக்கு - அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்!!

இந்நிலையில் இந்த வழக்கை இரு தரப்பும் வாபஸ் பெற்றதால் நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய 1 கோடி ரூபாயை திருப்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
கொரோனா குமார் படம் தொடர்பாக சிம்பு - தயாரிப்பு நிறுவனம் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்தது. மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பும் திரும்ப பெற்றநிலையில், வட்டியுடன் சேர்த்து ரூ.1.4 கோடியை நடிகர் சிம்பு-வுக்கு வழங்க தலைமை பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.