நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து!

 
sivaji sivaji

நடிகர் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக   தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை  திருப்பி செலுத்தாததால்,  வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை தர வேண்டும் என ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார். 

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டின் ஒரு பகுதியை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் அன்னை இல்லம் வீடு தனக்கு சொந்தமானது என்றும் சகோதரர் வாங்கி கடனுக்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்னை இல்லத்தின் மீது ராம்குமாருக்கு எந்த உரிமையும் அல்லது பங்கும் இல்லை என குறிப்பிட்டார். இதனையடுத்து, அன்னை இல்லத்தின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதி
வழக்கை ஒத்திவைத்தார்.

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்பதால் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.