த.வெ.க மாநாடு வெற்றி பெற வேண்டி கட்சி கொடியுடன் நடிகர் தாடி பாலாஜி சிறப்பு பூஜை
த.வெ.க மாநாடு வெற்றி பெற வேண்டி கட்சி கொடியுடன் நடிகர் தாடி பாலாஜி அம்பத்தூரில் உள்ள சந்தன சீனிவாச பெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை மேற்கொண்டார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக் 27ல் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் பால முருகன் தலைமையில் அம்பத்தூர் அடுத்த முகப்பேர் சந்தன சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். இதில் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டு வழிப்பட்டப்பின் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, “நேற்று தளபதி படத்திற்கான பூஜை இன்று மாநாட்டின் தலைவர் தளபதிக்காக நடைபெறும் பூஜையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மாநாட்டிற்காக என்னை பணியாற்ற கூறி எனக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நடிகராக அவருடன் பணியாற்றியுள்ளேன், ஆனால் கட்சியில் தற்போது தொண்டர்களுடன் சேர்ந்து பணியாற்றி தலைவர் எதிர்ப்பார்ப்பதை செய்து முடிப்பேன். இந்த கட்சியில் பணியாற்றிவது ஒரே ஒரு முகத்திற்காக தான். அது தளபதி விஜய் அவர்களுக்கு தான். முதல் கட்சியின் மாநாட்டிற்கு ராணுவ கட்டுப்பாடுடன் எந்த கட்சியும் நடந்ததில்லை. முதல் மாநாட்டிற்கே கட்சி தலைவர் அறிவுறுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.


