பணமோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது!

 
jayalakshmi

பணமோசடி வழக்கில் நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். 

சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமிக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இருவரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர். இதனிடையே, இந்த சமபவம் தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் திருமங்கலம் காவல் நிலையத்தில், நடிகை ஜெயலட்சுமிக்கு எதிராக புகார் மனு அளித்தார். 
 
இந்த நிலையில், பணமோசடி வழக்கில் நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரின் பேரில் ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று திருமங்கலம் போலீஸார் அவரை கைது செய்தனர். பணமோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.