சேரி மொழி குறித்த சர்ச்சை - நடிகை குஷ்பு விளக்கம்!

 
khushbu

சேரி மொழி கருத்து தொடர்பாக நடிகையும் தேசிய மகளிர் அணி உறுப்பினருமான நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பூ. "திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும். மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். நடிகை குஷ்புவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. 


இந்த நிலையில், நடிகை குஷ்பு தான் கூறிய கருத்து தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக குஷ்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தி வெளியிட்டுள்ள பதிவில், சேரி என்றால் பிரஞ்சு மொழியின் அன்பு என்று அர்த்தம். என்னை விமர்சித்தவர்களை நான் அன்பால் பேச முடியாது என நகைச்சுவையாக கூறி இருந்தேன். இந்த கருத்தை ஒருசில தவறாக சித்தரித்து பறப்பி வருகின்றனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.