தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தே தீரும் - குஷ்பு பேட்டி

 
kushbu-44

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்? குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர். இந்த நிலையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆட்சி அமைத்தே தீருவோம். அதில் என்ற மாற்றமும் இல்லை. பாஜக இருந்தால் தான் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தமிழக வருகை பலனளிக்குமா என்பது வரும் தேர்தலில் தெரியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்? மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயலபடுத்துகிறார். இவ்வாறு கூறினார்.