கணவரை பிரிந்தார் நடிகை ஷீலா

 
tn

திருமண உறவிலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை ஷீலா அறிவித்துள்ளார். 

tn

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஆறாவது சினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷீலா.  இதையடுத்து 2017 இல் வெளியான டூலெட் படம் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.  இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில்  திரையிடப்பட்ட நிலையில் இதன் பின்னர் மண்டேலா, திரவுபதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2 படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

tn

இந்த சூழலில் நடிகை ஷீலா தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும் சோழன் வாலறிவன்  என்று பதிவிட்டுள்ளார். இவர் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.