அதிமுக தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!!

 
ep

அதிமுக தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
admk

இதுக்குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் - 2023 தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன், கீழ்க்கண்டவர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள். டாக்டர் K. கோபால், Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திருமதி S. வளர்மதி,  கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. T. ரத்தினவேல், Ex. M.P., ,  கழக அமைப்புச் செயலாளர் திரு. S. ஆசைமணி, Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு. சிவா. ராஜமாணிக்கம்,   கழக அமைப்புச் செயலாளர் திரு. G. பாஸ்கரன்  முன்னாள் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்கள்.

ep

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.