தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு

 
govt

சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ponmudi

 அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சரும்,  திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு செம்மண் குவாரி தொடர்பாக சோதனை நடைபெறுகிறது.காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

tn

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்கு வருபவர்கள் யார் என்பது குறித்த விசாரணை செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடியின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.