கோவை மாநகர காவல் உயர் அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் ஆலோசனை

 
adgp arun

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கோவை மாநகர காவல் உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆலோசனை நடத்தினார். 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் . இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக காவலர் பணியை தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு யுபிஎஸ்சி தேர்வு தமிழில் எழுதி 2009 இல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். காஞ்சிபுரம், கடலூர் ,நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.  சென்னை காவல் துணை  ஆணையராக பதவி வகித்தார். கடந்த ஜனவரி 6 ஆம் தேதி  கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்றார்.  இந்த சூழலில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று  தனது வீட்டில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.  மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கை  துப்பாக்கியை வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு மனஅழுத்தமே காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

இந்நிலையில், கோவை மாநகர காவல் உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆலோசனை நடத்தினார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கோவை மாநகர காவல் உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.