சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

 
tt tt

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

govt

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.  மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Assembly

அத்துடன் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.